August 5, 2010

”தர்மம் தலை காக்கும்”

புற்று நோய் மனிதர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நோய். இந்நோயின் தாக்கம் கொண்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே வைத்தியத்தை எடுத்துக்கொண்டால் நோயின் தீவிரத்திலிருந்து தப்பிக்கலாம்.
அடையாரில் உள்ள கேன்சர் மருத்துவமனையைத் திறம்பட நடத்திடும் டாக்டர் சாந்தா, புற்று நோயாளிகளுக்கு ஒரு தெய்வமாகவே விளங்கிவருகிறார்.
கூலி வேலை செய்பவர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் கஷ்டப்படுபவர்கள்- இவர்கள் வைத்தியம் செய்ய சென்னை வந்தால் எங்கே தங்குவது?
கேன்சர் இன்ஸ்டிடியூட் அருகில், தர்மசாலா என்னும் கட்டிடத்தை சில புண்ணியவான்கள் கட்டி, டாக்டர் சாந்தா மூலம் ஏழை எளிய மக்கள் தங்கிட உதவ முன்வந்தார்கள். காஞ்சி  பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தர்மசாலா எதற்காகப் பயன்படவேண்டும் என்பதை சொல்லி அதைச் சரியாக ஸ்ரீமடமே ஏற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் டாக்டர் சாந்தா.
காஞ்சி பெரியவரின் சொற்படி கிருஷ்ணமூர்த்தி ”ஸ்ரீமாதா டிரஸ்ட்” ஆரம்பித்தார். ஸ்ரீ மாதா டிரஸ்ட் ரெஜிஸ்டிரேஷன் பண்ண பெரியவா தான் பணம் கொடுத்தார்.
ஆனால் அன்றாடம் செலவு, சாப்பாடு செலவு, மருந்து செலவு இதற்கு என்ன செய்வது என்று யோசித்தபோது மீடியாக்களும், பல நல்ல உள்ளங்களும், இளைஞர்கள் பலரும் உதவ முன்வந்தனர்.

source: Manjari (July 2010)

2 comments:

  1. Heard about this from my Appa when it came out in the news. Very nice idea of helping others. Very practical need. Do you have the address/contacts to this place?

    ReplyDelete
  2. Thank you for your valuable response. The address of Sri Matha Trust is,
    Sri Matha Trust
    Mohandevi Hirachand Nahar Rajasthani Dharmasala,
    Old Cancer Institute Premises,
    Gandhi Nagar, Adyar,
    Chennai - 600 020.
    India.
    Tel : (off) +91 - 44 - 2442 0727
    (Res) +91 - 44 - 2440 4950

    ReplyDelete