இக்கால இளம் பெண்களினிடையே கூந்தலுக்கு எண்ணெய் தடவும் பழக்கம் குறைந்திருப்பதைக் காணமுடிகிறது. கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது மூலம் பாதி கூந்தல் உதிர்வைத் தவிர்க்கலாம்.
”நம் உடலுக்கு இயற்கையான வாசனை திரவியங்கள் இருப்பது போல நம் கூந்தலுக்கும் வாசனை சேர்க்க இயற்கையான திரவியம் இருக்கிறதா?” என்று என் பாட்டியிடம் கேட்டபோது, அவர்கள் சொன்ன குறிப்பு இதோ உங்களுக்காக:
மருக்கொழுந்து - 1 கைப்பிடி
மருதாணி இலை - 1 கைப்பிடி
வெந்தயம் - 1 தே. கரண்டி (tea spoon)
நம் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணெயில் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை சேர்த்து, மிதமாக சுடவைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைக்கவும். இந்த எண்ணெயை தலையில் தடவிவர கூந்தல் மணமாக இருக்கும்.
No comments:
Post a Comment