தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 மூடி (துருவியது)
அரை உளுத்தம் பருப்பு - 2 மேஜைக் கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 4-5
புளி - 1 கொட்டைப்பாக்கு அளவு
உப்பு - தேவைக்கேற்ப
வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்க்களை (உப்பு தவிர) சேர்த்து வதக்கவும். இவை ஆறியதும் உப்பு சேர்த்து அறைத்தெடுத்தால் தேங்காய் துவையல் தயார்.
சூடான வடித்த சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி தேங்காய் துவையல் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். துவையல் அறைப்பதற்கு கல் உப்பு உபயோகப்படுத்துவது சுவையைக்கூட்டும்.
No comments:
Post a Comment