உடல் வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அதில் அசதி மிக முக்கியமான கரணமாக அமைகிறது. அலுவலகங்களுக்குச் செல்பவர்களுக்கு உடல் வலி ஒரு அழையாவிருந்தாளி போல் வந்துவிடுகிறது. முன் காலங்களில் உடலுழைப்பு மிகுதியாக இருந்தது. ஆனால், இன்று பலருக்கு உடலை வருத்திக்கொண்டு செய்யும் வேலை இல்லை. வேலையில் மாற்றம் இருந்தாலும் ஏனோ உடல் வலியில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை. இதற்கு என் பாட்டி சொன்ன கை வைத்தியம் என்ன தெரியுமா?
வெண்ணீரில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து அருந்தவேண்டும் என்பது. இப்படி அருந்திவர நாளடைவில் உடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல், சளி உபாதைகள் போன்ற பல நோய்கள் நீங்கும். ஓரு ஃப்ளாஸ்க்-இல் இந்த சுக்கு நீர் ஊற்றி அருந்திவரலாம்.
No comments:
Post a Comment